உங்களுக்கு பித்ரு சாபத்தால் கெடுபலன்கள் ஏற்படாமலிருக்க இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம்

pitru-worship
பிதுர் எனப்படும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல், அவர்களால் முற்காலத்தில் ஏற்பட்ட சாபங்கள் அனைத்தும் நீங்க நரசிம்ம பூஜை உகந்தது.

yoga-narasimmar
தெய்வங்களை நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பங்களை கோள் சொல்லி பிரிப்பது, வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவது போன்று முன்னோர்கள் செய்த பாவங்களால், அவர்களது வம்சாவழியினர் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு சில எளிய சாபநிவர்த்தி முறைகள் உள்ளது.

அந்த பரிகார நிவர்த்தி முறைகளை செய்தாலே போதும் இந்த முன்னோர்களின் சாபத்தில் இருந்து நாம் விடுபட முடியும்.

சரி வாங்க பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதில் நாம் காண்போம்.

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலை வேளைகளில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

narasimmar
முன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம் – நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகம்:

மாதா ந்ருஸிம்ஹ. பித்த ந்ருஸிம்ஹ
ப்ரதா ந்ருஸிம்ஹ. ஸகா ந்ருஸிம்ஹ
விதையை ந்ருஸிம்ஹ. த்ரவிணம் ந்ருஸிம்ஹ
ஸ்வாமி ந்ருஸிம்ஹ. ஸகலம் ந்ருஸிம்ஹ
இதோ ந்ருஸிம்ஹ. பரதோ ந்ருஸிம்ஹ
யாதோ யாதோ யாஹி. ததோ ந்ருஸிம்ஹ
ந்ருஸிம்ஹ தேவாத் பாரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே
சமஸ்கிருதம் படிக்க தெரியாதவர்கள் இந்த தமிழாக்கத்தை சொல்லலாம்.

முன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம் – நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகம்:
நரசிம்மனே தாய். நரசிம்மனே தந்தை.
சகோதரனும் நரசிம்மன். தோழனும் நரசிம்மனே
அறிவும் நரசிம்மனே. செல்வமும் நரசிம்மனே.
எஜமானனுக்கு நரசிம்மனே. எல்லாமும் நரசிம்மனே.
இந்த லோகம் முழுவதும் நரசிம்மனே. பரலோகத்திலும் நரசிம்மனே.
எங்கெங்கும் செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே.
நரசிம்மனைக் காட்டிலும் உயர்த்தவர் ஒருவரும் இல்லை.
அதனால் நரசிம்மனே..! உம்மைச் சரணடைகிறேன்.